தாய் ஒருவர் நான்கு வயது பிள்ளையை கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளார். மின்னேரிய ரத்மாலே, மஹா ரத்மலே தஹயே போக்குவ என்னும் பகுதியில் இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
பக்கத்து வீட்டுக்குச் சென்று விளையாடக் கூடாது என கண்டித்த தாய், பிரம்பினால் அடித்து பிள்ளையின் தலையை சுவரில் மோதச் செய்துள்ளார்.
இதனால் படுகாயமடைந்த நான்கு வயதான குறித்த பெண்ணின் மகன் உயிரிழந்துள்ளார்.
முதல் கணவரை பிரிந்து வாழும் இந்தப் பெண், உளவியல் பாதிப்பு தொடர்பிலான சிகிச்சைகளை பெற்றுக் கொண்டு வருகின்றார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுவனின் சடலம் பொலனறுவை வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் 24 வயதான தாயையும், தாயுடன் தகாத உறவு பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 26 வயதான வீட்டு உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மின்னேரிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.