தாயை பாதுகாக்கும் சிறுவன் : வறுமையிலும் படிப்பில் முன்னிலை!!

325

 
உடல்நிலை முடியாத தாயொருவரை 13 வயது மகன் கவனித்து வருகின்றமை தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

கலேவெல கரவில, வெல்யாய பிரதேசத்தில் வாழும் 13 வயது சிறுவன், மிகுந்த வறுமையின் மத்தியில் தாயை கவனித்து வருகிறார்.

பீ.கே.ஜு சுதேஷ் குமார என்ற சிறுவனே இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளார். 39 வயதான தாயின் கால் அவரசமாக நீக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவனின் 68 வயதான தந்தை கொழும்பு பிரதேசத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.

இந்த தந்தை அருகில் இல்லாத போதிலும், தாயின் அனைத்து தேவைகளையும் சிறுவனே நிறைவேற்றுகின்றார்.

மொரகொல்ல பிரதேச பாடசாலையில் 8ம் வகுப்பில் கல்வி கற்கும் இந்த சிறுவன் தாய்க்கான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிய பின்னர் பாடசாலைக்கு சென்று கற்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த குடும்பம் வாழ்ந்த மண் வீடு உடைந்து விழுந்தமையினால் தற்போது வரையில் தந்தையின் சகோதரருக்கு சொந்தமான சிறிய வீட்டிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

பாடசாலை செல்வதற்கு பாதணிகள் கூட இல்லாத இந்த சிறுவன் கற்கை நடவடிக்கைகளில் மிகவும் திறமையானவர் என குறிப்பிடப்படுகின்றது.