தற்கொலை செய்துகொள்வோம் என மிரட்டியதால் 16 வயது சிறுவனுக்கும், 71 வயது பாட்டிக்கும் திருமணம்!!

606

 
இந்தோனேசியாவில் தற்கொலை செய்துக்கொள்வோம் என்று மிரட்டியதால் 16 வயது பையனுக்கும், 71வயது மூதாட்டிக்கும் அவரது வீட்டார் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியைச் சேர்ந்தவர் ரோஹாயா, 71 வயதாகும் அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிலமாத் ரயாதி என்ற சிறுவனுக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு அதுவே காதலாக மாறியது.

இது தெரிய வந்த இருவரின் வீட்டாரும் அவர்களை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மூதாட்டியும் சிறுவனும் தங்களுக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வோம் என தெரிவித்தனர்.

இதனால் பயந்துப்போன இருவீட்டாரும் சிறுவனுக்கும் மூதாட்டிக்கும் திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணத்திற்கு கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இருவருக்குள் இருக்கும் காதலுக்கு ஆதாரமாக இருவரில் யார் முதலில் இறந்தாலும் மற்றொருவரும் இறந்துவிடுவோம் எனவும் திருமணத்திற்கு முன்பாக சத்தியபிரமாணம் செய்துக்கொண்டனர்.

மணமகள் ரோஹாயா இதற்கு முன்பு இருமுறை கணவனை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.