குப்பைகளை கொட்டிய 112 பேர் கைது!!

243

அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் குப்பைகளை கொட்டிய 112 பேர் இரண்டு நாட்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 02ம் மற்றும் 03ம் திகதிகளில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

அதன்படி கொழும்பு மாவட்டத்தில் 47 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 63 பேரும், களுத்துறை மாவட்டத்தில் இரண்டு பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக உரிய பொலிஸ் நிலையங்கள் ஊடாக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.