மக்கள் நோயினால் மரணிக்க நேரிடும் : பிரதமர் ரணில்!!

263

குப்பை போடுவதை தடை செய்வதனால் மக்கள் நோயினால் மரணிக்க நேரிடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நகரக் கழிவுகளை அகற்றுவதற்கு பொருத்தமான இடமில்லை. இதனால் பிரச்சினைகள் எழுந்துள்ளன. இதற்காக நிலையான ஓர் இடத்தைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.

குறித்த பகுதிகளுக்கு பொருத்தமான இடங்களில் குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கழிவகற்றல் மற்றும் கழிவு முகாமைத்துவத்திற்காக இயந்திர சாதனங்கள் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் கடன் மலையைப் போன்றே குப்பை மலையொன்றையும் மீதம் வைத்து சென்றுள்ளனர். ராஜபக்சக்களைப் போன்று பிரச்சினைக்கு பயந்து ஓடப் போவதில்லை.

நீதிமன்ற உத்தரவுகளினால் கொழும்பின் கழிவுகள் அதிகரிக்கக் கூடும். இவை அத்தியாவசிய தேவைகளாகும். இவற்றுக்கு எவ்வாறு உத்தரவு பிறப்பிப்பது?

காரணிகளை கண்டறிந்து அனைத்து தரப்பினையும் அழைத்து விளக்கம் கோரி நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிப்பது பொருத்தமாக அமையும்.

கழிவற்றல் மிகவும் முக்கியமான ஓர் பிரச்சினையாகும். கழிவுகளை அகற்றாவிட்டால் மக்கள் நோயினால் மரணிக்கக் கூடும் என பிரதமர் தெரிவித்துள்ளார்