அல் கொய்தா தலைவரை அமெரிக்க ராணுவம் சுட்டுப் பிடித்தது!!

386

al

கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் சோமாலியாவின் அல் சபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 67 பேர் பலியாகினர். அல் சபாப் இயக்கம் அல் கொய்தா தீவிரவாதிகளுடன் மிகவும் நெருக்கமானது.

எனவே அப் சபாப் தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டையில் அமெரிக்காவின் நேவிசீல்´என்ற சிறப்பு அதிரடிப்படை ஈடுபட்டது. லிபியா மற்றும் சோமாலியாவில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

லிபியா தலைநகர் திரிபோலி அருகே நடந்த வேட்டையில் அல்கொய்தா இயக்கத்தின் முக்கிய தளபதி அனாஸ் அல் லிபி என்கிற நஜிஅப்துல் ஹமீத் அல் ரூகை (49) என்பவன் பிடிபட்டான்.

இவனை பாகிஸ்தான் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடனை போன்று அமெரிக்க அதிரடிப்படை சுட்டுப்பிடித்த தகவல் வெளியாகியுள்ளது.

திரிபோலியில் அனாஸ் அல் லிபி பதுங்கியிருந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த நேவிசீல் படையினர் அங்கு துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதை தொடர்ந்து அங்கு அல் லிபிக்கு பாதுகாப்பாக இருந்த அல்கொய்தா தீவிரவாதிகளும் சுட்டனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. அதன் பிறகு அவர் பிடிபட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பிடிபட்ட அல் லிபி கடந்த 1992ம் அண்டில் கென்யா மற்றும் தான்சானியாவில் நடந்த அமெரிக்க தூதரகம் குண்டு வெடிப்பில் தொடர்புடையவன். இச்சம் பவங்களில் 224 பேர் பலியாகினர். எனவே இவனது தலைக்கு அமெரிக்கா 30 கோடி பரிசு தொகை அறிவித்து இருந்தது.

ஆனால் அல் லிபியை சுட்டுபிடித்த சம்பவம் லிபியா மக்களிடையே அதிர்ச்சியை யும் வியப்பையும் ஏற் படுத்தியுள்ளது. மேலும் இதற்கு விளக்கம் அளிக் கும்படி அமெரிக்காவிடம் லிபியாவின் இடைக்கால அரசு விளக்கம் கேட்டுள்ளது.