காதலியை சிகையலங்காரம் செய்வதற்கு நிலையத்தில் விட்டு 6000 ரூபா கட்டணம் செலுத்தாது தலைமறைவான காதலன்!!

488

சிகை­ய­லங்­காரம் செய்­வ­தற்­காக சிகை­ய­லங்­கார நிலை­ய­மொன்­றுக்கு 18 வய­தான காத­லியை அழைத்துச் சென்ற இளைஞர் ஒருவர் தனது காத­லியை அவ்­வி­டத்தில் விட்­டு­விட்டு சிகை­ய­லங்­கா­ரத்­துக்­கான பணத்தை வங்­கியில் எடுத்­து­வ­ரு­வ­தாக கூறி தப்­பிச்­சென்ற சம்­ப­வ­மொன்று அநு­ரா­த­புரம் பிரதேசத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

இந்­நபர் தனது காத­லிக்கு சிகை­ய­லங்­காரம் செய்­வ­தற்­காக அநு­ரா­த­புரம் நக­ரி­லுள்ள சிகை­ய­லங்­கார நிலை­யத்­துக்கு அழைத்து சென்­றுள்ள நிலையில் அவ­ருக்கு சிகை­ய­லங்­காரம் செய்து முடி­வ­டை­வ­தற்குள் அதற்­கான கட்­ட­ண­மான 6000 ரூபாவை எடுத்து வரு­வ­தாக கூறி 22 வய­தான காதலன் தனது காத­லியை விட்டுச் சென்­றுள்ளார்.

பதி­னெட்டு வய­தான யுவதி சிகை­ய­லங்­கா­ரத்தை முடித்துக் கொண்டு தனது காதலன் வரு­கைக்­காக சுமார் 4 மணித்­தி­யா­லங்கள் காத்­தி­ருந்த போதிலும் அவர் வராத கார­ணத்­தினால் மேற்­படி சிகை­ய­லங்­கார உரி­மை­யாளர், யுவ­தியை நேற்­று­முன்­தினம் மாலை அநு­ரா­த­புரம் பொலி­ஸா­ரிடம் ஒப்படைத்துள்ளார்.

கம்­பஹா வெலி­வே­ரிய பிர­தே­சத்தை சேர்ந்த 18 வய­தான யுவதியே இவ்­வாறு பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைக்­கப்­பட்ட நிலையில், அதன்­பின்னர் பொலிஸார் இது­தொ­டர்பில் அநுராத­புரம் பொலிஸ் மூலம் யுவ­தியின் பெற்­றோ­ருக்கு அறிவித்­தி­ருந்­தனர்.

தப்பிச் சென்ற தனது காதலன் குரு­ணாகல் பிர­தே­சத்தை சேர்ந்த­வ­ரெ­னவும் கடந்த 4 மாதங்­க­ளாக தாம் காத­லித்து வருவ­தா­கவும் யுவ­தி­யிடம் மேற்­கொள்­ளப்­பட்ட விசாரணையில் தெரி­ய­வந்­துள்­ளது.

சில தினங்­க­ளுக்கு முன்னர் காத­லனின் சகோ­தரி உயி­ரி­ழந்­தி­ருந்­த­மை­யினால் அவ­ரது மரண நிகழ்வில் கலந்­து­கொள்­வ­தற்­காக இந்த யுவதி குரு­ணா­க­லி­லுள்ள காதலன் வீட்­டுக்கு சென்­றுள்ளார். இறுதிச் சடங்­குகள் நிறை­வ­டைந்­ததன் பின்னர் இவ்­வி­ரு­வரும் வழி­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்­காக மூன்று நாட்­க­ளுக்கு முன்னர் அநு­ரா­த­புரம் நோக்கி சென்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இளைஞனின் பெற்றோருக்கு இவர்களது காதல் விவகார தெரிந்திருந்ததுடன் திருமணத்துக்கு சம்மதமும் தெரிவித்துள்ளனர். எனினும் யுவதியின் வீட்டாருக்கு இது தொடர்பில் எவ்வித தகவலும் தெரிந்திருக்கவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.