திருகோணமலையில் 13 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : 26 வயதான நபர் கைது!!

542

திருகோணமலை, கோமரங்கடவல பகுதியில் 13 வயதான சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோமரங்கடவல பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் நேற்று (04) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

கோமரங்கடவல, பம்புருகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.