வடக்கு மாகாணசபை உறுப்பினர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை!!

338

 
பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக தலைவர் திருமதி தமிழிசை சவுந்தராராஜன் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களை நேற்றிரவு (06.07.2017) யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மாகாணசபையின் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

சினேகிதபூர்வமான இந்த சந்திப்பில் மாகாணத்தின் தேவைகள் மற்றும் போருக்கு பின்னரான மக்களின் வாழ்ககை நிலவரங்கள் தொடர்பில் பேசப்பட்டதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஊடக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.

நேற்றைய தினம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பா.ஜ.க தமிழக தலைவர் அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதில் புதிய அமைச்சரான அனந்தி சசிதரன் மற்றும் மா.ச.உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.