கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையருக்கு விமான நிலையத்தில் வைத்து நேர்ந்த கதி!!

299

கனடாவில் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டுக்காக நாடு கடத்தப்பட்ட இலங்கையரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று மாலை வந்தடைந்துள்ளார். இவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விமான நிலையத்தில் வைத்தே கடுமையான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கனடாவில் நிரந்தர குடியுரிமையை பெற்ற, கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்ற இலங்கையரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், விசாரணைகளின் பின்னர் அவர் விடுவிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.