உலக நாடுகளின் சொர்க்கபுரியாக மாறும் மன்னார்!!

321

இலங்கையின் மன்னார் மாவட்டம் பிரதான சுற்றுலா மையமாக மாற்றப்படவுள்ளதாக சீன அரச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சினை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க மடு தேவாலயம், வில்பத்து தேசிய பூங்கா உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பல்வேறு இடங்களை மன்னார் மாவட்டம் கொண்டிருக்கிறது. மேலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் பல இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மாவட்டமாக, மன்னாரை மாற்றும் வகையில், பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடற்கரையுடன் இணைந்த 300 ஏக்கர் பகுதி அடையாளம் காணப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிட வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

இலங்கையில் நீண்ட காலமாக நிலவிய யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக மன்னார் உள்ளமை குறிப்பிடத்தக்கது.