வவுனியாவில் இன்று (08.07) மதியம் 12 மணியளவில் திடீரென மழை பெய்தததைக் காண்கூடியதாக இருந்தது.
வவுனியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கடும் வெப்பம் நிலவிவந்த நிலையில் இன்று திடீரென பெய்த மழையால் மக்கள் ஆறுதலடைந்துள்ளனர்.
வவுனியாவில் கடும் வறட்சி காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டதுடன் குடிநீருக்கும் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் இன்று சுமார் இரண்டு மணிநேரம் பெய்த கனமழை காரணமாக வீதிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியதை காணக்கூடியதாக இருந்ததுடன் திடீர் மழையால் மக்கள் தங்களை காத்துக்கொள்ள அவதிப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.
அதே நேரம் வவுனியாவில் தொடர்ந்தும் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.