யாழ் – பருத்தித்துறை பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், இரு பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும், உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபில் ஒருவருமே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
மேலும், இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன், சந்தேகநபர்கள் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
பொலிஸாரின் உத்தரவை மீறி நிறுத்தாமல் சென்ற லொறி மீது மணல்காட்டு பகுதியில் வைத்து நேற்று துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த லொறியில் மணல் ஏற்றிச் செல்லப்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.






