பிரிட்டனை சேர்ந்த இமார்ல்டு டூப்ரே(23) என்ற இளம் பெண் நரம்பு கோளாறால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து தூங்கும் நோய்க்கு தள்ளப்பட்டார்.
கடந்தாண்டில் மட்டும் 59 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கியுள்ள இவர் ஒரு குழந்தை தூங்கும்போது எப்படி நடந்து கொள்ளுமோ அப்படி நடந்து கொள்கிறார்.
தூக்க கலக்கத்திலேயே எழுந்து தண்ணீர் அருந்துவது, பால் குடிப்பது, சாப்பிடுவது போன்ற வேலைகளைச் செய்யும் இவரை, பரிசோதித்த மருத்துவர்கள் நரம்பில் சில பிரச்னைகள் இருப்பதால் தொடர்ச்சியாக தூங்கும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உலகில் 1 000 பேருக்கு மட்டுமே இந்த விசித்திர நோய் காணப்படுகிறது என்றும் இந்த நோயை குணப்படுத்துவது மிக கடினம் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனாலும் இமார்ல்டு டூப்ரே தனக்கு ஏற்பட்டுள்ள இந்த விசித்திர நோய் குணமடைந்து விடும் என உறுதியாக நம்புகிறார்.







