விடைபெற்ற கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் சச்சின், டிராவிட்!!

324

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான டெண்டுல்கரும், ராகுல் டிராவிட்டும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து விடைபெற்றுள்ளனர். டெல்லியில் நேற்று முன்தினம் சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி நடைபெற்றது.

இதில் மும்பை இண்டியன்ஸ் அணி ராஜஸ்தானை வீழ்த்தி சம்பியன் பட்டம் பெற்றது. இப் போட்டியுடன் இந்திய அணியின் நம்பிக்கை நட்சித்திரமும், மும்பை இண்டியன்ஸ் அணியின் வீரருமான சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றார்.

அவர் ஏற்கெனவே ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியுடன் அவர் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடைபெற்றார்.
அவர் ஆட்டம் இழந்து வெளியேறிய போது ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டியும், கரவொலி எழுப்பியும் பிரியா விடை கொடுத்தனர்.

அத்துடன் மும்பை வீரர்களும் இருபக்கமும் அணிவகுத்து நின்று அவருக்கு மரியாதை கொடுத்தனர். இதேபோன்று மற்றொரு ஜாம்பவானாகிய 40 வயதான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் அணித்தலைவர் ராகுல் டிராவிட்டுக்கும் தமக்கு இதுவே கடைசி 20 ஓவர் தொடர் என்று கூறியிருந்தார். அவரும் நேற்றுடன் ஓய்வு பெற்றார்.

அவர் இந்த தொடரில் 48 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தார். டிராவிட் வெளியேறிய போதும் அவருக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் வீரர்கள் மரியாதை தெரிவித்து விடை கொடுத்தனர்.

sachindravid