கடலில் நீராடிய போது காணாமல் போன இரு சகோதரர்களும் சடலங்களாக மீட்பு!!

623

அக்­க­ரைப்­பற்று பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட சின்­ன­மு­கத்­து­வார கடற்­கரை பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம் நீரா­டிய போது காணாமல் போன ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த இரு சகோ­த­ரர்­களின் சட­லங்­களும் நேற்று மீட்­கப்­பட்­டன.

ஆலை­ய­டி­வேம்பு, நாவற்­காடு பிரிவைச் சேர்ந்த குமா­ர­சு­வாமி சஜித் (19), குமா­ர­சு­வாமி சிதுஜன் (21) ஆகிய சகோ­த­ரர்­களே உயி­ரி­ழந்­த­வர்கள் என அக்­க­ரைப்­பற்று பொலிஸார் தெரி­வித்­தனர்.

சம்­பவ தினம் தம்­பட்­டையில் உள்ள அவர்­க­ளது உற­வி­னர்­களின் வீட்­டுக்குச் சென்று விட்டு வரும் வழியில் இவர்கள் இரு­வரும் மற்­று­மொரு நண்­பரும் சேர்ந்து ரெஜி­போ­மி­லான மிதப்பின் உத­வி­யுடன் கடலில் நீராடிக் கொண்­டி­ருந்த போதே இச்­சம்­பவம் நடை­பெற்­றுள்­ள­தாக கரை சேர்ந்­தவர் தெரி­வித்­துள்ளார்.

நீராடிக் கொண்­டி­ருக்­கையில் மிதப் பின் ஒரு பகுதி சேத­ம­டைந்து இளைய சகோ­தரர் கடலில் மூழ்­கி­ய­தை­ய­டுத்து அவரை காப்­பாற்றும் நோக்கில் கடலில் பாய்ந்த மூத்த சகோ­த­ரரும் கட­ல­லையால் அள்­ளுண்டு செல்­லப்­பட்­ட­தா­கவும் அவர் கூறினார்.

இதே­வேளை, இச்­சம்­ப­வத்தை கண்­ணுற்ற உல்­லா­சப்­பி­ர­யாணி ஒருவர் கடலில் மூழ்­கி­ய­வர்­களை காப்­பாற்­று­வ­தற்­காக அதிக பிர­யத்­தனம் மேற்­கொண்­ட­தா­கவும் நேரில் கண்­ட­வர்கள் தெரி­வித்­தனர்.

அம்­மு­யற்சி தோல்­வி­ய­டைந்­ததை தொடர்ந்து பொது­மக்­களின் உத­வி­யுடன் தம்­பட்டை மற்றும் சின்­ன­மு­கத்­து­வார மீன­வர்­களின் உத­வி­யுடன் இரு­வரின் உடல்­களும் மீட்­கப்­பட்­டன.

அக்­க­ரைப்­பற்று பொலிசார் சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ள நிலையில் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர்போல் சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் சடலங்களை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைகளை நடாத்துமாறு உத்தரவிட்டார்.