மாகாண மட்ட தமிழ்தின கட்டுரை வரைதல் போட்டியில் முல்லைத்தீவு குமுழமுனை ம.வி மாணவிகளான பிரிவு -2 ல் இருந்து பகீரதன் லாசன்ஜா, பிரிவு 5ல் இருந்து சிவலோகநாதன் சதுசியா ஆகிய இருவரும் பங்கு பற்றி முதலாமிடத்தை பெற்றிருந்தார்கள்.
அத்துடன் நேற்று (09.07) தேசிய ரீதியாக கொழும்பு டி.எஸ்சேனநாயக்க கல்லூரியில் நடாத்தப்பட்ட தமிழ்தின போட்டியில் கலந்து கொண்டிருந்தார்கள்.
இம் மாணவர்களின் சாதனை குமுழமுனை ம.வி க்கும், முல்லை வலயத்திற்கும் பெருமை தேடிக்கொடுத்திருக்கின்றது. இவர்கள் கல்வியில் மென்மேலும் சிறக்க பாடசாலை சமூகம் வாழ்த்தி நிற்கின்றது.








