விளையாடிக் கொண்டிருந்த போது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!!

640

baby dead

தொலைக்காட்சி பெட்டி தவறி விழுந்ததில் ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓமானின் அல்குவெய்ர் நகரில் கேரள தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

இவர்களது ஒன்றரை வயது ஆண் குழந்தை ஆதி. கடந்த வாரம் குழந்தையின் தாய் சமையல் வேலைகளை கவனித்து கொண்டிருந்தார். அப்போது தனியாக விளையாடிக் கொண்டிருந்த ஆதி தொலைக்காட்சியின் வயரை பிடித்து இழுத்துள்ளான்.

எதிர்பாராதவிதமாக தொலைக்காட்சி அவன் மீது விழவே பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றும் சிகிச்சை பலனில்லாமல் ஆதி பரிதாபமாக உயிரிழந்தான். இதனையடுத்து ஆதியின் உடல் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.