தவணைப்பரீட்சைக்கு பதில் திருட்டு தர்பூசணி விருந்து : தோட்ட உரிமையாளரை விருந்துக்கு அழைத்த மாணவர்கள்!!

552

தவணைப்பரீட்சைக்கு செல்லாமல் தோட்டம் ஒன்றிற்குள் புகுந்து தர்பூசணியை உட்கொண்டதும் இல்லாமல் குறித்த தோட்டத்தின் உரிமையாளரை தங்களுடன் தர்பூசணி சாப்பிடுவதற்கு அழைத்த சம்பவமொன்று வட மேல் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.

பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் குழு ஒன்று தவணைப்பரீட்சைக்கு செல்லாமல் பாடசாலைக்கு சற்று தொலைவில் அமைந்துள்ள தர்பூசணி தோட்டத்தினுள் புகுந்து தர்பூசணி சாப்பிடும் அவ் வழியால் சென்ற நபரை தங்களோடு சேர்ந்து தர்பூசணி சாப்பிட வருமாறு அழைத்துள்ளனர்.

குறித்த நபர் ஆவேசமடைந்து கண்ணிமைக்கு நேரத்தில் ஒரே பாய்ச்சலில் கம்பி வேலிக்குள் புகுந்து மாணவர்களை நோக்கி “யாரை கேட்டு நீங்கள் என் தோட்டத்தினுள் புகுந்தீர்கள்” என்று கேட்டுள்ளார்.

தோட்ட உரிமையாளரை சற்றும் எதிர்பார்க்காத மாணவர்கள் அத்தோட்ட உரிமையாளரின் கால்களில் விழுந்து இனி இவ்வாறான தவறை செய்யமாட்டோம் என மன்னிப்புக்கோரி தப்பித்துள்ளனர்.