மல்லாவியில் 4.5 மில்லியன் ரூபா செலவில் புதிய பேருந்து நிலையப் பணிகள் ஆரம்பம்!!

584

 
போரினால் அழிவடைந்த பிரதேசங்களின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் வகையிலும், பயணிகள் போக்குவரத்தில் எதிர் கொள்ளும் இடர்களை இலகு படுத்தும் முகமாகவும் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மல்லாவி நகரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான வேலைகள் 10.07.2017 திங்கள் கிழமை அன்று வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் கணபதிப்பிள்ளை வல்லிபுரம் கமலேஸ்வரனால் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த பிரதேச மக்களின் நலனையும் மாவட்டத்தின் அபிவிருத்தியையும் கருத்தில் கொண்டு வட மாகாண போக்குவரத்து அமைச்சின் 2017 ம் ஆண்டிற்கான அபிவிருத்தி நன்கொடை நிதி ஊடாக 4.5 மில்லியன் ரூபா செலவில் புதிய பேருந்து நிலையம் அமையவுள்ளது.

குறித்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் நீண்ட நாட்களாக பயணிகள் பேருந்து நிலையம் இல்லாது மக்கள் எதிர் கொண்ட பல்வேறு அசௌகரியங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் காணப்பட்டது. மேற்படி நிகழ்வில் பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர், கிராம சேவையாளர், தனியார் பேருந்து சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் கலந்து சிறப்பித்தனர்.