ஒருவரை வெட்டிக்கொன்ற மூவருக்கு மரண தண்டனை!!

222

கூரிய ஆயுதங்களினால் ஒருவரை வெட்டிக்கொலை செய்த மூன்று குற்றவாளிகளுக்கு பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குணதிலக்க இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் 12 வருடங்களுக்கு முன்னர் நடந்துள்ளது. கடந்த 2005 -11-17ம் திகதி பண்டாரகம அட்டலுகம பிரதேசததில் மொஹமட் இஸ்ஸதீன் என்பவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் 7 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவர்களின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

53 வயதான மொஹமட் லெப்பே மொஹமட் சகரியா,51 வயதான ஜமால்தீன் மொஹமட் ஃபஷிம், 34 வயதான மொஹமட் பாருக் மொஹமட் இக்பால் ஆகிய குற்றவாளிகளுக்கே மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.