சோபாவில் படுத்தபடி உயிரை விட்ட கணவன் : செய்த தவறால் துடித்துப் போன மனைவி!!

1469

 
பணி முடிந்து சோர்வாக வீட்டுக்கு வந்த கணவன் இரவில் சோபாவில் படுத்து தூங்கிய நிலையில் காலையில் சடலமாக கிடந்துள்ள சம்பவம் மனைவிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Somerset கவுண்டியை சேர்ந்தவர் Mikey Murrell (36), இவர் மனைவி Ashley Murrell. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

சம்பவத்தன்று Mikey 16 மணிநேர அலுவலக பணியை முடித்து விட்டு சோர்வாக வந்துள்ளார்.

ஏன் குடும்பத்துடன் நேரம் செலவழிக்காமல் இப்படி பணியே கதி என இருக்கிறீர்கள் என Ashley கணவர் Mikey-யிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதன்பின்னர், அங்கிருந்த சோபாவில் கணவரை படுத்துத் தூங்க சொல்லிவிட்டு தனது அறைக்கு Ashley சென்றுள்ளார்.

மறுநாள் விடிந்த பிறகு Mikey உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதை கண்டு Ashley கதறியுள்ளார், தூக்கத்திலேயே மூச்சடைப்பு ஏற்பட்டு Mikey உயிரிழந்தது பின்னர் தெரியவந்தது.

இந்நிலையில், கணவருடன் இறுதியாக தான் பேசிய போது அது வாக்குவாதமாக ஆனதை நினைத்து Ashley தற்போது மனம் வருந்துகிறார்.

வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என தெரியாது. அதனால் குடும்பத்தினருடன் ஏதாவது பிரச்சனை என்றால் அதை தீர்த்து விட்டு தூங்க செல்லுங்கள் என மற்றவர்களுக்கு Ashley வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தங்களுடைய திருமண நாளின் போது, மனைவியை சுற்றுலா அழைத்து செல்வதற்காக Mikey அதிக நேரம் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.