முகமது நஷீத்தின் வெற்றி செல்லாது : மறு தேர்தலுக்கு மாலைதீவு நீதிமன்று அனுமதி!!

372

Maldives-flag

மாலைதீவில் 2008ல் முதல் ஜனநாயக தேர்தல் நடந்தது. இதில் மாலைதீவின் ஜனநாயக கட்சியின் முகமது நஷீத் வெற்றி பெற்றார். நான்கு ஆண்டுகள் ஜனாதிபதியாக பதவி வகித்தார். ராணுவ புரட்சி காரணமாக கடந்த ஆண்டு பதவி விலகினார்.

பின்னார் 2வது ஜனநாயக தேர்தல் கடந்த செப்டம்பர் 7ஆம் திகதி நடந்தது. இதில் துணை ஜனாதிபதியாக இருந்த முகமது வகீத், மாஜி ஜனாதிபதி முகமது நஷீத் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

இதில் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் முறைகேடுகள் நடந்ததாக எதிர்கட்சிகள் நீதிமன்றில் முறையிட்டனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்று மறு தேர்தல் நடத்த அனுமதி அளித்தது. ஏற்கனவே நடந்த தேர்தல் செல்லாது எனவும் அறிவித்தது.