போரினால் காணாமல் போன மகன் : கண்ணீரை வர வைக்கும் தாயின் செயல்!!

232

இலங்கையில் நிலவிய போரினால் வடக்கு மற்றும் கிழக்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு வகையில் பாதிப்புகளுக்கு உள்ளாகினர்.

அவ்வாறு அம்பாறையில் பாதிக்கப்பட்ட மணி அம்மா என்பவரின் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

தினமும் காலையில் எழுந்தவுடன் முதலில் மணி அம்மா, காணாமல் போன தனது மகனின் புகைப்படம் பதியப்பட்டுள்ள அடையாள அட்டையை எடுத்து கையில் வைத்துக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிள்ளைகளின் பாதுகாப்பினுள் வாழ வேண்டிய மணி அம்மா மற்றும் அவரது கணவருக்கு யுத்தம் அந்த அதிர்ஷ்டத்தை இல்லாமல் செய்துவிட்டது.

யுத்தம் காரணமாக தனது மகளின் கணவரும் காணாமல் போயுள்ளார். இதனால் மகளின் பிள்ளைகளை பார்த்து கொள்ளும் பொறுப்பையும் மணி அம்மா மற்றும் அவரது கணவரால் ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

“எனது மகளின் கணவரும் காணாமல் போயிருந்தார். பின்னர் அவர் வெளிநாட்டிற்கு சென்று விட்டார். எனினும் இன்று வரையில் அவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை.

எனது கணவரின் தொழில் கிடைக்கும் பணத்திலேயே மகளின் பிள்ளைகளை பார்த்துக் கொள்கின்றோம்.”.. என மணி அம்மா தெரிவித்துள்ளார்.

தனது கண் முன்னால் மகன் உயிரிழக்கவில்லை என்பதனால் மகன் வரும் வரை இந்த தாய் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.