வெளிநாடொன்றில் தப்பியோடிய இலங்கைப் பெண் : குழப்பத்தில் பொலிஸார்!!

554

சைப்ரஸ் நாட்டின் Larnaca பொது மருத்துவமனையில் இருந்து இலங்கை பெண்ணொருவர் தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.

39 வயதான இலங்கை பெண் ஒருவர் தப்பி ஓடியதால், அந்நாட்டு அதிகாரிக்கு ஒருவருக்கு எதிராக பொலிஸார் ஒழுக்காற்று விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

Menogia பொலிஸாரின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த அந்த பெண், குறிப்பிடப்படாத நோயினால் பாதிப்பப்பட்ட நிலையில் அந்த பெண்ணுக்கு அறுவை கிசிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அந்த பெண் வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.

அந்த பெண்ணை பாதுகாத்த அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ் தலைமை அதிகாரியினால் உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் Stelios Stylianou தெரிவித்துள்ளார்.

அந்த பெண்ணை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர்.

அந்த பெண் தொடர்பில் தகவல் அறிந்தால் Larnaca குற்ற விசாரணை பிரிவின் 24804060 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் அந்த பெண் என்ன காரணத்திற்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பதற்கான தகவல்கள் வெளியாகவில்லை.