களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை 6.30 மணியளவில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 25 வயதுடைய இளம் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சமுத்ரா தேவி ரயில் பயணித்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த பெண் ரயிலில் குதித்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.