சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்த இலங்கா தீபத்தின் வடபால் அகிலாண்டேஸ்வரம் எனப் போற்றப்படும் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் மகோற்சவம் நாளை மதியம் 12.00 மணியளவில் சிவஸ்ரீ. ரகுநாத கமலேஸ்வர குருக்கள் தலைமையில் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது.
மேற்படி உற்சவத்தில்
கொடியேற்றம் 17.07.2017 திங்கட்கிழமை
ஆடி அமாவாசை -23.07.2017 ஞாயிற்று கிழமையும்
சப்பர திருவிழா -24.07.2017 திங்கட்கிழமையும்
தேர்த்திருவிழா -25.07.2017 செவ்வாய்கிழமையும்
தீர்த்த திருவிழா -26.07.2017 புதன்கிழமையும் இடம்பெறும்!