கடன் அட்டை மோசடி : இலங்கையர் உட்பட மூவர் கைது!!

349

போலியான வங்கி கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் உட்பட இரண்டு பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த நிலையில், கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு சென்று வசித்து வந்த திவ்யன் என்ற இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையரும் இரண்டு இந்தியர்களும் பல்வேறு நபர்களின் கடன் அட்டைகளின் விபரங்களை மோசடியாக பெற்று, போலி கடன் அட்டைகளை தயாரித்து இணையத்தளம் வழியாக பொருட்களை கொள்வனவு செய்து வந்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 144 போலி கடன் அட்டைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் இணையத்தளம் வழியாக கொள்வனவு செய்த ஒரு லட்சம் இந்திய ரூபாவுக்கும் மேல் மூன்று தொலைக்காட்சி பெட்டிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்களுக்கு எதிராக சைபர் குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.