தலைமன்னாருக்கான புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்!!

213

கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான புகையிரத சேவைகள் நாளை முதல் எதிர்வரும் 23ம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பிலிருந்து பயணிக்கும் இரயில் மதவாச்சி வரை சேவையில் ஈடுபடும் என புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மதவாச்சி மற்றும் செட்டிக்குளம் பகுதிக்கு இடையில் உள்ள பழைய பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் அமைக்கப்படுவதன் காரணமாகவே தலைமன்னாருக்கான புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.