கனடாவில் இலங்கையர் மீது கொலைக் குற்றச்சாட்டு : திட்டமிட்டு தாமதப்படுத்திய நீதிமன்றம்!!

393

கனடாவில் கொலை குற்றம் சாட்டப்பட்ட இலங்கையரது வழக்கு விசாரணைகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கனடாவில் குடியுரிமை பெற்ற இலங்கையரான தனபாலசிங்கம் சிவலோகநாதன் என்பவரின் வழக்கு விசாரணையே இவ்வாறு தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

கொலை குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்த இலங்கையர் தொடர்பான வழக்குகளில், பாதுகாப்புக் குழு தனது குற்றச்சாட்டுகளை தாமதப்படுத்துவதில் முக்கிய பங்கை வகித்ததாக கியூபெக்கின் குற்றவியல் மற்றும் குற்றவியல் வழக்குகளின் இயக்குனர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சமீபத்தில் நாடு கடத்தப்பட்ட சிவோலோகநாதன் தனபாலசிங்கத்தின் மீது கொலைக் குற்றச்சாட்டுக்களை தக்க வைத்துக் கொள்ளுவதற்கான முடிவை எடுக்கும் வகையில் Crown நீதிமன்றத்தின் வாதங்கள் காணப்பட்டதாக கனடா வானொலி ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

தனபலிசிங்கம் மற்றும் அவரது சட்ட குழுவினரால் ஏற்பட்டுள்ள தாமதங்களை உச்சநீதிமன்ற நீதிபதி Justice Alexandre Boucher கருத்திற்கொள்ளாமல் தவறிழைத்துள்ளார். அதேபோல் வழக்கு தொடர்பான சிக்கல் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளவில்லை எனவும் வழக்கின் சுருக்கம் கூறுகின்றது.

தனபாலசிங்கம் 2012 ஆம் ஆண்டு அவரது மனைவி அனஜா பாஸ்கரனை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டார். எனினும் இந்த வழக்கினை விசாரிப்பதற்கு நீதிபதி Boucher 55 மாதங்களை எடுத்து கொண்டார்.

கொலை குற்றம் சுத்தப்பட்டவர் ஒருவரின் வழக்கு கனடா உச்ச நீதிமன்றத்தில் இந்த அளவு தாமத்தை ஏற்படுத்துவது நியாயமற்ற ஒரு விடயமாகும்.

குறைந்த அளவிலான கடுமையான குற்றம் சுமத்தப்பட்ட வழக்கு விசாரணைகள் 18 மாதங்களுக்குள் நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் கொலை உட்பட, பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்டவை, 30 மாத காலப்பகுதிக்குள் நிறைவு செய்திருக்க வேண்டும்.

2018ஆம் ஆண்டு முதல் தனபாலசிங்கத்தின் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக Crown நீதிமன்ற ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் இன்னும் ஒரு நீதிபதி 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றும் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த வழக்கிற்கான திகதிகளை முன்வைத்தார்.

இந்த நிலையில் தணபாலசிங்கம் தானாகவே நாடு கடத்தலை விரும்பி ஏற்று கொண்டதற்கமைய அவர் அண்மையில் கனடாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

-தமிழ்வின்-