கடனாக செலுத்த வேண்டிய பணத்தை செலவு செய்த பின்னர் தன்னை கடத்திச் சென்றதாக நாடகமாடிய பெண்!!

247

கடனைச் செலுத்­து­வ­தற்­காக கணவன் வழங்­கிய பணத்தை செலவு செய்த பின்னர் மயக்­க­ம­ருந்து கொடுத்து தன்னை சிலர் வேன் ஒன்றில் கடத்தி சென்று பணத்தை அப­க­ரித்­த­தாக அநு­ரா­த­புரம் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறைப்­பாடு செய்ய வந்த பெண் ஒரு­வரின் போலி நாட­கத்தை பொலிஸார் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

குரு­ணாகல் பிர­தே­சத்தை சேர்ந்த 37 வய­தான பெண் ஒருவர், தனக்கு மயக்க மருந்து கொடுத்து ஆண்கள் சிலர் தன்னை கடத்திச் சென்று அநு­ரா­த­புரம் நகரில் விட்டுச் சென்­ற­தாக கூறி அநு­ரா­த­புரம் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறைப்­பாடு செய்த­த­னை­ய­டுத்து சிறுவர் மற்றும் மகளிர் பிரி­வினர் அவரிடம் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

இத­னை­ய­டுத்து, அநு­ரா­து­புரம் பொலிஸ் நிலைய மகளிர் பிரிவு பொறுப்­ப­தி­காரி தம்­மிகா டி சில்வா குறித்த பெண்ணை அழைத்­துக்­கொண்டு அவர் கடத்­தல்­கா­ரர்­களால் கைவிடப்பட்ட இடத்தை காண்­பிக்­கு­மாறு அழைத்து சென்­ற­போது, அப்பெண் பொய்­யாக ஓர் இடத்தை காண்­பித்­துள்ளார்.

அதன் பின்னர் பொலிஸார் அங்­கி­ருந்த சீசீ­ரிவி கெம­ராக்­களை சோத­னை­யிட முயற்­சித்த போது முறைப்­பாட்­டாளர் பொலி­ஸாரை திசை திருப்ப முயற்­சித்­துள்ளார். அதன்­போது சந்தேகம் கொண்ட பொலிஸார் அப்­பெண்­ணிடம் விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­போது அவ­ரது நாடகம் தெரி­ய­வந்­துள்­ளது.

பின்னர், கொழும்பில் பணி­யாற்­றி­வரும் அப்பெண்ணின கணவரை வர வழைத்த பொலிஸார் சந்தேக நபரான பெண்ணை கடுமையாக எச்சரித்து அவரது கணவரிடம் ஒப்படைத்துள்ளனர்.