அனுமதி இன்றி பால் மா விலை அதிகரிக்கும் பால்மா நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
பால் மா விலை அதிகரிப்பு குறித்து பால் மா நிறுவனங்கள் அனுமதி கோரிய போதும் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ரூமி மஸ்ருக் தெரிவித்தார்.
இந்நிலையில் சட்டவிரோதமாக பால் மா விலையை அதிகரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். பால் மா விலை குறித்து இன்று தொடக்கம் சோதனை நடத்தப்படும் என அவர் கூறினார்.
ஒரு கிலோ கிராம் பால் மா பைக்கற்றின் கட்டுப்பாட்டு விலை 810 ரூபாவாகவும் 400 கிராம் பால் மா பைக்கற் 325 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.