மைத்திரியின் செயற்பாட்டை வரவேற்ற சர்வதேசம்!!

723

காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டமையை சர்வதேச சமூகம் வரவேற்றுள்ளது.

இலங்கையின் ஸ்திரமான சமாதானத்துக்கான ஒரு படிக்கல்லாக தாம் இந்த சட்டத்தில் கையெழுத்திட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால இன்று தமது டுவிட்டர் தளத்தின் ஊடாக தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இந்த நடவடிக்கையை ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான இணைப்பாளர் உனா மெக்கலி, குறிப்பிட்டத்தக்க முன்னேற்ற நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் தூதுவர் அடுல் கெசாப், மைத்திரிபாலவின் இந்த நடவடிக்கை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

இந்த முனைப்பை, காணாமல் போனோரின் நிலையை கண்டறிவதற்காக காத்திருக்கும் உறவுகள் நம்பிக்கையுடன் பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை, காணாமல் போனோரின் குடும்பங்களை பொறுத்தவரை, அவர்களின் கேள்விகளுக்கு பதில்களை வழங்கும் முக்கியமான அம்சம் என்று கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி விட்டிங் தெரிவித்துள்ளார்.