ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை முடக்கியவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் இணையத்தளத்தை முடக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில், 17 வயது மாணவன் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். எனினும் அவர்களை நீதிமன்றம் முன்னர் பிணையில் செல்ல அனுமதித்தது. இந்நிலையில் கொழும்பு பிரதான நீதவான் அவர்களை விடுதலை செய்துள்ளார்.
சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு சட்ட மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று நீதவான் லால் ரணசிங்க பண்டாரவிடம் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்களையும் மீள ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.