யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து மீது கல்வீச்சு!!

241

 
யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து மீது கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டதாக கிளிநொச்சி பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து மீது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களால் கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பயணிகளிற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.