இலங்கையர் ஒருவர் இந்தியாவில் 100 கோடி ரூபாய் மோசடி!!

234

அண்மையில் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையர் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த ஒருவர் என தி டைம்ஸ் ஒப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய கடனட்டை மோசடி தொடர்பிலேயே குறித்த நபர் தேடப்பட்டு வந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடனட்டை ஊடாக 100 கோடி ரூபாய் வரையில் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக ஆளுநரால் 2012ம் ஆண்டு குறித்த நபரை கைது செய்வதற்கு அவசர உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் பெங்களூர் ஜலஹாலி பகுதியில் போலிக் கடனட்டையைப் பயன்படுத்தி தொலைக்காட்சி ஒன்றை கொள்வனவு செய்த பின்னர் குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.