ஸ்பெயினில் இருந்து பிரித்தானியாவிற்கு சென்ற விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட போது, பெண் ஒருவர் பயத்தின் காரணமாக தன் குடும்பத்தாருக்கு குறுந் தகவல் அனுப்பியுள்ளார்.
ஸ்பெயினின் Ibiza பகுதியிலிருந்து பிரித்தானியாவின் லீட்ஸ் பகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை Jet2 விமானம் புறப்பட்ட 30 நிமிடங்களில், விமானத்தில் சிறிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அதனால் அவசரமாக விமானம் தரையிறக்கப்படுகிறது என அதிகாரிகள் அறிவித்தனர்.
எனவே அனைவரும் விமானத்தின் அவசர உதவிக்கு பயன்படும் ஆக்ஸிஜன் மாஸ்க்களை அணிந்து கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டனர். அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்து அறிவித்த அடுத்த நிமிடமே மாஸ்க்கும் கீழே வந்துள்ளது.
இந்நிலையில் விமானத்தின் உள்ளே இருந்த பயணிகள் பெரும் பதற்றமடைந்தனர். அதில் சில பயணிகள் அழுதுள்ளனர். இந்த விமானத்தில் பயணம் செய்த 39 வயதான Nickola Tye தன் குடும்பத்தாருக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், விமானம் அவசரமாக தரையிறக்கப்படுகிறது, எதுவும் நடக்கலாம், ஐ லவ் யூ என்று குறுந்தகவல் அனுப்பியிருக்கிறார்.
இதேவேளை, இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், விமானத்தில் உள்ள அதிகாரி ஒருவர் அவசர நிலை, அவசர நிலை என்று கூறுகிறார். உடனடியாக ஆக்ஸிஜன் மாஸ் கீழே வருகிறது. அவசரமாக விமானம் தரையிறக்கப்படும் என்று கூறுகிறார்கள்.
இதனால் பயத்தில் இருந்த எனக்கு இரண்டு குழந்தைகள், கணவர் என்று அவர்கள் ஞாபகம் தான் வந்தது.
அவர்களை நான் மீண்டும் பார்ப்பேன் என்று நினைத்துப் பார்க்க வில்லை, விமானத்தில் இருந்த சிலர் அழுது கொண்டிருந்தனர். எதுவும் நடக்கலாம் என்ற காரணத்தினால் அது போன்ற குறுந்தகவல் அனுப்பியதாக பதிவிட்டுள்ளார்.






