வவுனியாவில் கடும் வறட்சி : 24507 குடும்பங்கள் பாதிப்பு : குடிநீருக்கும் தட்டுப்பாடு!!

279

வவுனியா மாவட்டத்தில் தொடரும் வறட்சி காரணமாக 102 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 24 ஆயிரத்தி 507 குடும்பங்களைச் சேர்ந்த 85 ஆயிரத்தி 772 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் எஸ்.சூரியராஜா தெரிவித்தார்.

வவுனியாவில் 42 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 11 ஆயிரத்து 256 குடும்பங்களை சேர்ந்த 39 ஆயிரத்து 382 பேரும், வவுனியா வடக்கைச் சேர்ந்த 20 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட 2ஆயிரத்து 923 குடும்பங்களை சேர்ந்த 10 ஆயிரத்து 419 பேரும், வவுனியா தெற்கைச் சேர்ந்த 20 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 5ஆயிரத்து 316 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 605 பேரும், வவுனியா வெண்கலச்செட்டிக்குளத்தைச் சேர்ந்த 20 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட 4 ஆயிரத்து 962 குடும்பங்களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 365 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் நில நீர் வற்றிப் போயுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பகுதிகளான வவுனியாவில் 350 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 225 பேருக்கும், வவுனியா வடக்கு 3 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட 128 குடும்பங்களைச் சேர்ந்த 488 பேருக்கும், வவுனியா வெண்கலச்செட்டிக்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 189 குடும்பங்களை சேர்ந்த 870 பேருக்குமாக மொத்தம் 667 குடும்பங்களைச் சேர்ந்த 2583 பேருக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் தற்போது அறு தண்ணீர் பவுசர்களே மக்களுக்க நீர் வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் வவுனியா மாவட்டத்தில் வறட்சி அதிகரித்து வரும் நிலையில் மேலும் 16 தண்ணீர் வவுசர்களின் தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலம் தண்ணீர் தாங்கிகள், தண்ணீர் வடிகட்டி இயந்திரம் போன்றவற்றிற்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.

விவசாயம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நீர் இல்லாமல் விவசாயம் செய்யாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈடு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.