வவுனியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான மாநாடு!!

608

 
வவுனியாவில் இன்று (22.07.2017) காலை 8.30 மணியளவில் நகரசபையின் கலாச்சார மண்டபத்தில் வவுனியா மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான செலமர்வு வவுனியா உதவி மாவட்ட செயலாளர் கா.கமலதாசன் தலைமையில் இடம்பெற்றது.

இன்றைய நிகழ்வில் கிராம அபிவிருத்தி சங்கம், மகளிர் அபிவிருத்திச்சங்கம், பொது அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள், ஆகியோருக்கான சிவில் அமைப்புக்களுக்கான செயலமர்வு இடம்பெற்றுள்ளது.

இதில் விஷேட விரிவுரையாளர்களாக கிறிஸ்னானந்தன், லாலு விஜயநாயக்க, சைப்டீன். மற்றும் த.சுதாகர், கிராம அபிவிருத்திசங்கம், மகளிர் கிராம அபிவிருத்திச்சங்க சமாசத்தின் தலைவர், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பள்ளி வாசல் நிர்வாகத்தினர், இந்து சமய கோவில் நிர்வாக உறுப்பினர்கள், கமக்கார அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மக்களால் வினாவப்பட்ட பல்வேறு வினாக்களுக்கான தெளிவுகள் ஏற்படுத்தப்பட்டு அரசியல் சீர்திருத்தம் தொடர்பான செயலமர்வு இடம்பெற்றிருந்தது.