ஆபாச காட்சி விவகாரம் : இயக்குனர் மீது பொலிஸ் கமிஷனரிடம் நஸ்ரியா புகார்!!

317

Nasriya

நடிகர் தனுஷ், நஸ்ரியா நசீம் நடிப்பில் உருவாகியுள்ள படம் நய்யாண்டி. இப்படத்தை களவாணி, வாகை சூடவா ஆகிய படங்களை இயக்கிய சற்குணம் இயக்கியுள்ளார். இப்படத்தில் நஸ்ரியா சம்பந்தப்பட்ட காட்சி ஒன்றை இயக்குனர் ஆபாசமாக படம் பிடித்துவிட்டதாக கூறி நஸ்ரியா இயக்குனர் மீதும் படத்தின் தயாரிப்பாளர் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.

இந்நிலையில் நேற்று சென்னை காவல்துறை ஆணையர் ஜோர்ஜிடம் நஸ்ரியா நேரில் சென்று இயக்குனர் சற்குணம் மீதும் தயாரிப்பாளர் சந்திரசேகர் மீதும் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது..

நான் நய்யாண்டி படத்தில் நடித்துள்ளேன். இப்படம் வருகிற 11ம் திகதி வெளியாகவிருக்கிறது. நான் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் முஸ்லீம் சமுதாயத்தில் பிறந்தவள். நான் மலையாளம் மற்றும் தமிழில் சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன்.

சமீபத்தில் நய்யாண்டி படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அந்த டிரைலரை யூடியூப்பில் பார்த்த எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. நான் நடித்த பாடல் காட்சியின் மத்தியில் வேறு நடிகையை வைத்து டூப் போட்டு ஆபாசமாக நடிக்க வைத்துள்ளனர்.

படத் தயாரிப்பின்போது இந்தக் காட்சியில் நடிக்க நான் மறுத்துவிட்டேன். என்னுடைய குடும்பத்துக்கும், நான் சார்ந்த சமுதாயத்திற்கும் அவமானம் என்பதால் நான் இந்த காட்சியில் நடிக்கவில்லை. ஆனால் படத்தின் டிரைலரில் என்னை ஆபாசமாக காட்டியிருக்கிறார்கள்.

அதன்பின்னர் இயக்குனர் சற்குணத்தை தொடர்புகொண்டு இதுபற்றி கேட்டேன். ஆனால் அவர் என்னையும், என் குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும், இதுபற்றி புகார் கொடுக்கக்கூடாது எனவும் மிரட்டினார். இதையடுத்து, தயாரிப்பாளர் கதிரேசனை தொடர்புகொள்ள முயன்றேன். ஆனால் அவர் என்னுடன் பேச மறுத்துவிட்டார்.

இப்படத்தில் இதுபோன்று மேலும் சில டூப் காட்சிகளை எனக்குத் தெரியாமலேயே சேர்த்திருப்பார்கள் என கவலையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் படம் 11ம் திகதி வெளியாகவுள்ளது. அதற்கு முன்னர் இந்த படத்தை எனக்கு போட்டுக் காட்ட படக்குழுவினருக்கு தாங்கள் வலியுறுத்த வேண்டும். அவர்கள் மறுத்தால் படத்தை வெளியாவதை தடுத்து நிறுத்த வேண்டும். என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.