கதறியழுத யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்!!(காணொளி)

903

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலின் போது படுகாயமடைந்த அவரது மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய யாழ். நல்லூர் பகுதியில் வைத்து நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார். இந்த தாக்குதலின் போது நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் இருவர் மீது குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்திருந்தனர்.

உடனடியாக அவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரு மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்துள்ளார்.

வயிற்றில் பலத்த காயமடைந்திருந்த மெய்ப்பாதுகாவலரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

குறித்த மெய்ப்பாதுகாவலர் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக 17 ஆண்டுகள் இருந்துள்ளார்.

இவரது சடலத்தை பார்வையிட வைத்தியசாலைக்குச் சென்ற நீதிபதி இளஞ்செழியன் அவரது உறவினர்களின் காலில் விழுந்து தனது நன்றியை தெரிவித்ததுடன், தனது மெய்ப்பாதுகாவலரின் இழப்பைதாங்கமுடியாது கதறியலும் காட்சி அருகிலிருந்தவர்களையும் கண்கலங்கவைத்ததுடன் இவரது மனிதாபிமானத்திற்கு இச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

இப்படி ஒரு நீதிபதி எமக்கு கிடைத்திருப்பதற்கு நிற்சயமாக தமிழர்களான நாம் அனைவரும் பெருமைப்படவேண்டும்.