வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் வாள்வெட்டு : இருவர் படுகாயம் : மோட்டார் சைக்கிள் சேதம்!!

744

வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் மீது வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு 10.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாள்வெட்டில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து வவுனியா பொலிசார் சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் பயணித்த மோட்டர் சைக்கிளும் உடைத்து நொருக்கப்பட்டுள்ளது.