சர்வதேச பட விழாவில் ரஜினிகாந்துக்கு அழைப்பு!!

330

Rajani

கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

கோவாவில் நடக்கும் சர்வதேச பட விழா 2004ம் ஆண்டில் இருந்து வருடம் தோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தடவையும் இந்தியாவில் உள்ள பிரபல நடிகர் ஒருவரை இவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைப்பது வழக்கம்.

கடந்த வருடம் இந்தி நடிகர் அக்சய்குமார் பங்கேற்றார். இந்த வருடம் கோவா படவிழா அடுத்த மாதம் 20ம் திகதி ஆரம்பமாகின்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை துவக்கி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்து ரஜினிக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாக விழா அமைப்பாளர் விஷ்ணுவாக் தெரிவித்தார். ரஜினி பங்கேற்பது பெருமை அளிப்பதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.