நீதிபதி இளஞ்செழியனை கொலை செய்ய முயற்சித்தவர் இனங்காணப்பட்டதாக பொலிஸ் தகவல்!!

336

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லூர் பின் வீதியில் நேற்று சனிக்கிழமை மாலை 5.10 மணியளவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றமையால் அங்கு பெரும் பதற்ற நிலை உருவாகியது.

இந்தச் சம்பவத்தின் போது, யாழ். மேல் நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொரு மெய்ப்பாதுகாவலர் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் துப்பாக்கிச்சூடு நடாத்திய துப்பாக்கிதாரியை அடையாளம் கண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிதாரி புங்குடுதீவு நாலாம் வட்டாரத்தை சேர்ந்தவர் என்றும் அவர் மீது கொலை வழக்கு ஒன்று நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, நேற்றைய தினம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் அனலைதீவை சேர்ந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

-தமிழ்வின்-