காசோலை மோசடி வழக்கில் நடிகை ஜீவிதாவுக்கு பிடிவாரண்ட்!!

1070

Jeevitha

தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரனின் மனைவி நடிகை ஜீவிதா, பரந்தாமரெட்டி என்பவரிடம் 34 லட்சம் கடனாக வாங்கினார். 3 மாதங்களில் திருப்பிக்கொடுப்பதாக கூறிய ஜீவிதா, பணத்தை கொடுக்கவில்லை.

அவர் ஏற்கனவே கொடுத்த காசோலையை பரந்தாமரெட்டி வங்கியில் போட்டபோது, அது பணம் இல்லாமல் திரும்பிவிட்டது. இதனால் பரந்தாமரெட்டி பொலீசில் புகார் செய்தார். நீதிமன்றம் இரு முறை சம்மன் அனுப்பியும் ஜீவிதா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதனால் ஜீவிதாவுக்கு நேற்று ஐதராபாத் நீதிமன்றம், ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்தது. நடிகை ஜீவிதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலீசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.