யாழ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் சடலத்திற்கு ஏராளமான பொது மக்கள் அஞ்சலி!!

801

 
யாழில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் உடல் தற்போது யாழ். பொலிஸ் தலைமையகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான பொதுமக்கள் வருகைதவருகின்றனர்.

நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிலாபத்தைச் சேர்ந்த 51 வயதாகிய ஹேமரத்ன என்பவர் உயிரிழந்திருந்தார்.

இவர் கடந்த 15 வருடங்களாக நீதிபதி இளஞ்செழியனின் நம்பிக்கைக்குரியவராகவும், அவரது மெய்ப்பாதுகாவலராகவும் பணியாற்றியிருந்தார்.

யாழ். நல்லூர் பகுதியில் நேற்று நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இவர் பரிதாபமாக உயிரிழந்திருந்தார். இவருடைய உடல் பிரேதபரிசோதனையின் பின் இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் யாழ். பொலிஸ் தலைமையகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், பலரும் அஞ்சலி செலுத்துகின்றனர்.

உயிரிழந்தவரின் உறவினர்களை இனறு காலை யாழ். போதனா வைத்தியசாலையில் சந்தித்த நீதிபதி இளஞ்செழியன் அவர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரியதுடன், கண்ணீர்விட்டு அழுதிருந்தமை குறிப்பிடத்தக்கது.