நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சூத்திரதாரியின் மோட்டார் சைக்கிள் மீட்பு!!

222

நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றவரின் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த மோட்டார் சைக்கிளை யாழ். அரியாலை பகுதியில் வைத்து இன்று காலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது நல்லூர் பகுதியில் வைத்து நேற்று மாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் லிங்கம் கூல் பார் வழியாக தப்பிச் சென்றிருந்தார்.

இந்த நிலையில் குறித்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் அரியாலை பகுதியில் வைத்து கண்டுபிடித்துள்ளனர்.

எனினும், நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இன்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேகநபராக கருதப்படும் புனர்வாழ்வு பெறாத முன்னாள் போராளி ஒருவரின் நண்பர்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கடந்த 17 வருடங்களாக நீதிபதியின் மெய்ப்பாதுகாவலராக பணியாற்றிய சிலாபத்தைச் சேர்ந்த 51 வயதுடைய ஹேமரத்ன என்பவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.