உயிரிழந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் வீட்டில் மனதை உருக்கும் கண்ணீர்க் காட்சிகள்!!

353

 
யாழில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த, நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் சடலத்திற்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நல்லூர் – பின்வீதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

வடமாகாண நீதிபதிகள் உயிரிழந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் சடலத்தை அவரது உறவினர்களிடம் கையளித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 51 வயதுடைய ஹேமரத்ன என்பவரே உயிரிழந்ததுடன், தற்போது அவரது சடலம் சிலாபம் – சின்னவத்தை பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.