பலியான மெய்ப்பாதுகாவலரின் மகனை கட்டித் தழுவி அழுத நீதிபதி!!(வீடியோ)

388

மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் கேமரத்னவின் பூதவுடல் சிலாபம் சின்னவத்தை பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சிலாபத்தில் உள்ள மெய்ப்பாதுகாவலர் கேமரத்னவின் வீட்டிற்கு சென்ற நீதிபதி இளஞ்செழியன் அவரின் மகனை கட்டி தழுவி கதறி அழுதுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலர் கேமரத்னவின் பூதவுடல் தற்போது சிலாபம் சின்னவத்தை பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் நீதிபதி மா.இளஞ்செழியனுடன் சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், மன்னார் நீதவான்- ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா, மல்லாகம் நீதவான் ஏ.யூட்சன்ஆகியோரும் சென்றிருந்தனர்.

யாழில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த, நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோக்கத்தரின் சடலத்திற்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு உத்தியோகத்தரின் இல்லத்தில் பெருந்திரளான மக்கள் மற்றும் வடமாகாண நீதிபதிகள், அரச உத்தியோகத்தர்கள் போன்றோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.