அனுராதபுரத்தில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி!!

495

அனுராதபுரத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.

அனுராதபுரம் – மீகெல்லேவ விகாரையில் உள்ள புத்தரின் சிலை மற்றும் ஏனைய சில பெறுமதியான பொருட்களை மோட்டர் சைக்கிளில் சென்ற இரண்டு கொள்ளையர்கள் நேற்றிரவு கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.

இதன்போது, கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

இதில், பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.